Wednesday, November 8, 2017


மா.நன்னன் மரணம் முதல்வர் இரங்கல்


 மா.நன்னன் மரணம் முதல்வர் இரங்கல்
சென்னை, ஊடகங்களின் வழியே, தமிழ் கற்பித்த பேராசிரியரும், முன்னாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனருமான, மா.நன்னன், 94, காலமானார்.
சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள, அவரது இல்லத்தில், அவரது உடலுக்கு, தமிழறிஞர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் பழனிசாமி, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் உள்ளிட்ட பலர், இரங்கல் தெரிவித்துள்ளனர்.நன்னன், கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அருகில் உள்ள, சாத்துக்குடல் என்ற கிராமத்தில் பிறந்தார். அண்ணாமலை பல்கலையில் புலவர் பட்டமும், சென்னைப் பல்கலையில், முனைவர் பட்டமும் பெற்றார். சென்னை, மாநிலக் கல்லுரி உள்ளிட்ட பல கல்லுாரிகளில் பேராசிரியராக பணியாற்றினார். 1980 முதல், 1983 வரை, தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனராக இருந்தார்.பின், வயது வந்தோர் கல்வி வாரிய துணை தலைவராக பதவியேற்று, கற்பித்தலில் புதிய உத்திகளை புகுத்தினார். சென்னை தொலைக்காட்சியில், 'எண்ணும் எழுத்தும்' என்ற நிகழ்ச்சி; தனியார் தொலைக்காட்சியில், 'தமிழ் பண்ணை' என்ற நிகழ்ச்சிகளின் வழியாக, தமிழ் கற்பித்தார். ஊடகவியலாளர்களுக்கு, தமிழ் உச்சரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கினார். 70க்கும் மேற்பட்ட நுால்களை எழுதி உள்ளார். இவரின் பல நுால்கள், பள்ளி, கல்லுாரிகளில் பாடங்களாக உள்ளன.
தீவிர தமிழ் பற்றாளரான இவர், தன் இயற்பெயரான, திருஞானசம்பந்தன் என்பதை, நன்னன் என, மாற்றிக்கொண்டார். தன் பிள்ளைகளுக்கும், வேண்மாள், அவ்வை, அண்ணல் என, தமிழ் பெயர்களை வைத்தார். இவருக்கு, பார்வதி என்ற மனைவி உள்ளார்.

No comments:

Post a Comment

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters

Guv welcomed with ‘Dravida nal thirunadu’ posters  TIMES NEWS NETWORK 24.10.2024 Dindigul : Tamil Nadu governor R N Ravi awarded  degrees to...