Sunday, December 17, 2017

லஞ்ச வழக்கில் சார் பதிவாளருக்கு 8 ஆண்டு சிறை

Published : 17 Dec 2017 11:23 IST

ஈரோடு

ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் கோபி சார் பதிவாளருக்கு ஈரோடு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பாஸ்கரன் வீதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். முதியோர் காப்பக ஆலோசகர். இவர் கடந்த 2004-ம் ஆண்டு காப்பகத்தின் ஆண்டு அறிக்கையை பதிவு செய்ய கோபியில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அப்போது சீட்டு மற்றும் சங்கங்கள் பிரிவின் சார் பதிவாளராகப் பணியாற்றி வந்த தங்கவேல், ஆண்டு அறிக்கையில் உள்ள தவறை மறைத்து பதிவு செய்ய ரூ.500 லஞ்சம் பெற்றுள்ளார். இதை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர்.

இந்த வழக்கு ஈரோடு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் மீது நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. லஞ்சம் வாங்கிய தங்கவேலுக்கு 8 ஆண்டு சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். லஞ்சம் பெற்ற புகார் தொடர்பாக கடந்த 2007-ம் ஆண்டு தங்கவேல் பணி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...