Wednesday, December 13, 2017

சபரிமலை வரும் பெண்கள் பம்பையில் விரட்டி பிடிப்பு

Added : டிச 13, 2017 00:45

சபரிமலை: சபரிமலைக்கு கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகளவில் வந்த, 10 - 50 வயதுடைய
பெண்களை, பம்பையில் போலீசார் தடுத்து வருகின்றனர். போலீசாருக்கு, 'டிமிக்கி' கொடுத்து ஓடும் பெண்களை, பம்பையில், போலீசார் விரட்டி பிடிக்கின்றனர்.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள், சன்னி தானம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, உழைக்கும் பெண்கள் அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில், இன்னும் தீர்ப்பு வரவில்லை.


இதற்கிடையில், சமூக வலைதளங்களில், பெண்கள், சபரிமலைக்கு செல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதித்துள்ளதாக, தகவல் பரப்பப்பட்டு வருகிறது; இதை தேவசம் போர்டு மறுத்து வருகிறது. ஆனாலும், இந்த சீசனில் அதிகமான பெண்கள் வருவதாக,
பம்பையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் போலீசார் தெரிவித்தனர்.
இப்படி வரும் பெண்களை கண்காணிக்க, பம்பை கணபதி கோவிலின் கீழ் பகுதியில்,
தேவசம் போர்டு பெண் ஊழியர்கள் மற்றும் பெண் போலீசார் நியமிக்கப்
பட்டுள்ளனர். இந்த சீசனில் இதுவரை, 1,000 பெண்கள் வந்துள்ளதாகவும், அதில் பெரும்பகுதியினர், ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.பம்பைக்கு, தங்கள் உறவினர்களுடன் வரும் பெண்கள், போலீசாரின் கையை தட்டி விட்டு, சன்னிதானம் நோக்கி ஓடுகின்றனர். இவர்களை, பெண் போலீசார் விரட்டி பிடிக்கின்றனர். இவ்வாறு தடுக்கப்படும் பெண்கள், தேவசம்போர்டு பெண் ஊழியர்கள் பாதுகாப்பில் பம்பையில்தங்கவும், உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...