Wednesday, December 13, 2017

தாய், குழந்தை மரணம் : டாக்டர் ஆஜராக உத்தரவு

Added : டிச 13, 2017 04:34

மதுரை: ஸ்ரீவில்லிப்புத்துார் அரசு மருத்துவமனையில் தாய் மற்றும் அவரது வயிற்றிலிருந்த குழந்தை இறந்ததற்கு, 50லட்சம் ரூபாய் இழப்பீடு கோரிய வழக்கில், சம்பந்தப்பட்ட டாக்டர் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்துார் ராஜா தாக்கல் செய்த மனு:எனது மனைவி மரியலில்லி பவுலின். எங்களுக்கு 2 மகன்கள் பிறந்தனர். 2011 ல் மீண்டும் மனைவிகர்ப்பமுற்றார். 2011 செப்.,23 ல் ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு பணிபுரிந்த ஒரு டாக்டரை அழைக்க, செப்.,26 இரவு அவரது வீட்டிற்குசென்றேன். அங்கு அவர் தனியாக மருத்துவமனை நடத்தி வந்தார். எனது மனைவியை காப்பாற்ற உதவுமாறுகெஞ்சினேன். அவர், 'மனைவி, குழந்தை நன்றாக உள்ளது,' என்றார். பின் மனைவி மற்றும் அவரதுவயிற்றிலிருந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறினர். இச்சம்பவத்திற்கு காரணமான சம்பந்தப்பட்ட டாக்டர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், 50 லட்சம் ரூபாய்இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ராஜா மனு செய்திருந்தார்.


நீதிபதி ஆர்.மகாதேவன்,'' சம்பந்தப்பட்ட டாக்டர் டிச.,21 ல் ஆஜராக வேண்டும்,'' என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...