Thursday, December 21, 2017

வங்கிகள் 'ஸ்டிரைக்' ஒத்திவைப்பு

Added : டிச 21, 2017 00:15

நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள், வரும், 27ல், மேற்கொள்ள இருந்த, வேலை நிறுத்தம், ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு, 2012ல், ஊதிய உயர்வு தர, நிர்வாகங்கள் சம்மதித்தன. ஆனால், ஐ.டி.பி.ஐ., வங்கி, நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, அவர்களுக்கு, ஐந்து ஆண்டுகளாக ஊதிய உயர்வு தரப்படவில்லை. அதனால், 27ல், அவர்களுக்கு ஆதரவாக, வேலை நிறுத்தம் செய்யப்போவதாக, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கமும், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கமும் அறிவித்தன. இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த பேச்சில், ஒரு மாதத்திற்குள், அந்த ஊதிய நிலுவையை தருவதாக, ஐ.டி.பி.ஐ., வங்கி அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனால், வேலை நிறுத்தம் தற்காலிகமாக, ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது என, வங்கி ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -




No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...