Thursday, December 21, 2017

ஒட்டன்சத்திரத்தில் தக்காளி கிலோ ரூ.4

Added : டிச 21, 2017 04:29

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் விளைச்சல் அதிகரித்ததால், தக்காளி விலை வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.4க்கு விற்கப்படுகிறது. ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், பாலப்பன்பட்டி, நால்ரோடு உட்பட பல இடங்களில் ஒட்டுரக தக்காளி அதிகமாக விளைவிக்கப்படுகிறது. விளைந்த தக்காளிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.20 க்குவிற்கப்பட்டது. விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை சரிந்தபடி உள்ளது. நேற்று ஒருகிலோ தக்காளி ரூ.4 க்கு விற்றது.

இதனால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க இப்பகுதியில் ஒரு தக்காளி சாறு பிழியும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து
உள்ளனர்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...