Tuesday, December 11, 2018

அரசு ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க முடியுமா: உயர்நீதிமன்றம் கேள்வி

Added : டிச 10, 2018 22:59

மதுரை: நிலுவைத் தொகை பலன்களை 2016 ஜனவரியிலிருந்து வழங்க வேண்டும் என்ற அரசு ஊழியர்கள் கோரிக்கையை, ஒருநபர் கமிஷன் பரிசீலனை செய்ய முடியுமா என்பதை, ஜன.,7ல் தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அதுவரை வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக ஜாக்டோ-ஜியோ சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும்; ஏழாவது சம்பளக் கமிஷனின் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டோ-ஜியோ'சார்பில் டிச.,4 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.வழக்கறிஞர் லோகநாதன், 'வேலைநிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.டிச.,3ல் ஜாக்டோ-ஜியோ வழக்கறிஞர்: பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.

 இதன்படி ஸ்ரீதர் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அக்கமிஷன் நவ.,27 ல் அறிக்கை சமர்ப்பித்தது. ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரையில் முரண்பாடுகளை களைய வேண்டும்.இது தொடர்பாக அமைக்கப்பட்ட சித்திக் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. ஏழாவது சம்பளக் கமிஷனின்நிலுவைத்தொகையை வழங்கவில்லை. கோரிக்கைகள் தொடர்பாக2017ல் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை என்றார்.நீதிபதிகள், 'இந்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து டிச.,10ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும். அதுவரை போராட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்,' என்றனர்.வேலைநிறுத்தத்தை டிச.,10 வரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜாக்டோ-ஜியோ சார்பில் உறுதியளிக்கப்பட்டது.நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு நேற்றுவிசாரித்தது.அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், ''கால அவகாசம் தேவை''என்றார்.நீதிபதிகள்: ஓய்வூதிய திட்டம் தொடர்பான ஸ்ரீதர் கமிஷனின் அறிக்கையை அரசுத் தரப்பில் நாளை (டிச.,12) தாக்கல் செய்ய வேண்டும். நிலுவைத் தொகை பலன்களை 2016 ஜனவரியிலிருந்து வழங்க வேண்டும் என்ற ஊழியர்கள் தரப்பு கோரிக்கையை சித்திக் கமிஷன் பரிசீலனை செய்ய முடியுமா என்பதை ஜன.,7 ல் தெரிவிக்க வேண்டும் என்றனர். அதுவரை வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜாக்டோ-ஜியோ தரப்பு வழக்கறிஞர் நீதிபதிகளிடம் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024