Thursday, December 13, 2018

அண்ணாமலை பல்கலை பதிவாளர் விடுவிப்பு

Added : டிச 12, 2018 23:11




சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் விடுவிக்கப்பட்டு, புதிய பதிவாளர் நேற்று மாலை பொறுப்பேற்றார்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாக பொறுப்பு பதிவாளராக ஆறுமுகம் பதவி வகித்து வந்தார். உயர்கல்வித் துறை உத்தரவின் படி, பதிவாளர் ஆறுமுகம் நேற்று அதிரடியாக விடுவிக்கப்பட்டார்.புதிய பொறுப்பு பதிவாளராக முன்னாள் வேளாண் புல முதல்வர் ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டு நேற்று மாலை, 6:30 மணிக்கு பொறுப்பேற்றார். இவர் ஒரு ஆண்டிற்கு, பொறுப்பு பதிவாளராக பதவி வகிப்பார்.பல்கலைக்கழகத்தில், நிதி நெருக்கடி காரணமாக, 5,000க்கும் மேற்பட்டோர் இடமாறுதல் செய்யபட வேண்டும். இதில், 3,000 ஆசிரியர்கள், ஊழியர்கள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இடமாறுதல் மற்றும் ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டதால், உயர்கல்வித் துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வந்தனர்.இதனால், துணைவேந்தர் முருகேசனுக்கும், பதிவாளர் ஆறுமுகத்திற்கும் சில மாதங்களாக பனிப்போர் நிலவி வந்தது. இந்நிலையில் பதவியில் இருந்த பதிவாளர் ஆறுமுகம் திடீரென அதிரடியாக மாற்றப்பட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024