Saturday, May 2, 2015

பாஸ்வேர்டு இல்லாமல் திறக்கும் வசதி; விண்டோஸ் 10-ல் அறிமுகமாகிறது

சியாட்டில்,

கம்ப்யூட்டர்கள், டேப்லட்டுகள், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்களை லாக் இன் ஓப்பன் செய்வதற்கு நாம் தற்போது பரவலாக பாஸ்வேர்டு முறையை பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், முதல்முறையாக பாஸ்வேர்டு இல்லாமலேயே கம்ப்யூட்டர்களுக்குள் நுழையும் வசதியை மைக்ரோசாப்ட் கொண்டு வருகிறது. விண்டோஸ் இயங்குதள வரிசையில் கடந்த ஓராண்டாக பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பது விண்டோஸ் 10. வழக்கமான விண்டோஸ் இண்டர்பேஸை முற்றிலுமாக மாற்றியிருப்பதாக கூறும் மைக்ரோசாப்ட் யூசர் பிரெண்ட்லியாக நிறைய ஆப்ஸ்களை பாதுகாப்பு உறுதியுடன் இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு நவீனமாக்கியிருக்கிறது.

குறிப்பாக, வழக்கமான இண்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு பதிலாக ஸபார்ட்டரான் எனும் புதிய பிரவுஸரை மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்துகிறது. மேலும், பாஸ்வேர்டு இல்லாமல் கைரேகை, முகம் மற்றும் ஐரிஸ் ஐடென்டிபிகேஷன் வழியாக கம்ப்யூட்டரை திறக்கும் புதிய முறையும் அறிமுகமாகிறது. விண்டோஸ் ஹலோ என்ற இந்த புதிய வசதியில், நாம் எழுத்துக்களை பாஸ்வேர்டாக கொடுக்க வேண்டியதில்லை. மாறாக, நமது முகத்தையே அடையாளமாகக் கொண்டு ஸ்கேன் செய்து கம்ப்யூட்டரை திறக்கலாம். இது ஹேக்கர்களிடமிருந்து நமது கம்யூட்டர்களையும் பாதுகாக்கும். ஆனால், இந்த புதிய பாதுகாப்பு அம்சமானது இனிமேல் வெளிவர உள்ள லேட்டஸ்ட் கருவிகளில் மட்டுமே இயங்கும். குறிப்பாக, RealSense F200 sensor கொண்ட சிப்களில் மட்டுமே இது இயங்கும். இதுபோன்ற, நடைமுறை சிக்கல்கள் பல இருப்பினும் விண்டோஸ் 10-ல் வெளியாகும் இந்த வசதி நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024