Tuesday, August 15, 2017


விமான நிலையம் - செங்கல்பட்டு மேம்பாலம்:தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பேச்சு

பதிவு செய்த நாள்14ஆக
2017
23:23

சென்னை விமான நிலையம் முதல் செங்கல்பட்டு வரை மேம்பால சாலை அமைப்பதற்கான ஆய்வறிக்கை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

சென்னை, ஜி.எஸ்.டி., சாலையில், விமான நிலையம் அமைந்துள்ள திரிசூலம் முதல் செங்கல்பட்டு வரை, போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகி உள்ளது. இந்த சாலையை ஒட்டியுள்ள, 10 கி.மீ., வரை, புதிய குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. இவ்வாறு, உட்புற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், ஜி.எஸ்.டி., சாலையில் சேரும் இடங்களில் தான், அதிகளவில் நெரிசல் ஏற்படுகிறது. இதனால், குரோம்பேட்டை, எம்.ஐ.டி., தாம்பரம், வண்டலுார் பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுஉள்ளன.

ஒவ்வொரு சந்திப்பிலும் மேம்பாலம் கட்டுவதற்கு பதிலாக, திரிசூலம் முதல் செங்கல்பட்டு வரை, 41 கி.மீ.,க்கு மேம்பால சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, சி.எம்.டி.ஏ., அனுமதி அளித்தது. இதற்காக நியமிக்கப்பட்ட, சி.டி.எம்.ஸ்மித் நிறுவனம், சாத்தியக்கூறு அறிக்கையை, சி.எம்.டி.ஏ.,விடம் அளித்துள்ளது.இதனடிப்படையில், புதிய மேம்பால சாலை அமைக்கும் திட்டம் குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பேச்சு நடத்தப்படும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறினர்.- நமது நிருபர் -

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...