Thursday, August 3, 2017

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் 'பிராட்பேண்ட்' சேவை பாதிப்பு

பதிவு செய்த நாள் 03 ஆக
2017
04:13
dinamalar

வைரஸ் தாக்குதல் காரணமாக, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், 'பிராட்பேண்ட' இணையதள சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., அதன் வாடிக்கையாளர்களுக்கு, தரைவழி தொலைபேசி வழியாக, 'பிராட்பேண்ட்' எனும் அதிவேக இணைய சேவையை வழங்குகிறது. சில மாதங்களாக, தமிழகம் உட்பட, பல்வேறு மாநிலங்களில், பிராட்பேண்ட் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பலர், அந்த சேவையை ரத்து செய்ய துவங்கி உள்ளனர்.

சென்னை, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: தரைவழி தொலைபேசிக்கும், கணினிக்கும் இடையே பொருத்தப்படும், 'மோடம்' எனும் சிறிய கருவியில் ஏற்பட்ட பிரச்னையே அதற்கு காரணம். அது தான், இணைய சேவைக்கு உதவுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் கொள்முதல் செய்யப்பட்ட, 'டெராகாம்' எனும் மோடத்தை, ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு தந்தோம்; அதில், எளிதாக வைரஸ் புகுந்து தாக்கி உள்ளது.
அதனால், வாடிக்கையாளர்களுக்கு, மோடம் தருவதை நிறுத்தி விட்டோம். புதிய வாடிக்கையாளர்களிடம், அதை வெளியில் வாங்கி, பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். பழுதான மோடத்தை மட்டும், அருகில் உள்ள, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் மையத்தில் தந்து, சரி செய்து கொள்ளலாம். இதற்காக, ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Man gets 7-yr jail for holding two govt jobs Continued To Draw Pay From Health, Edu Depts

Man gets 7-yr jail for holding two govt jobs Continued To Draw Pay From Health, Edu Depts  TIMES NEWS NETWORK 11.03.2022 Lucknow : A local c...