Wednesday, November 8, 2017


கட்சி துவங்க காசு கேட்ட கமல்: ஜெயக்குமார் கிண்டல்


  கட்சி துவங்க காசு கேட்ட கமல்: ஜெயக்குமார் கிண்டல்
சென்னை, ''உலகிலேயே கட்சி துவங்க, தொண்டர்களிடம், 30 கோடி ரூபாய் கேட்டது, நடிகர் கமலாக தான் இருப்பார்,'' என, அமைச்சர், ஜெயக்குமார் கூறினார்.
அவரது பேட்டி:கன மழை பெய்யும் போது, சாலைகளில் மழை நீர் தேங்கும். மழை நின்றதும் தேங்கிய நீர் வடிந்து விடும். சென்னையை பொறுத்தவரை, 14 
ஆண்டுகளாக, சராசரி மழை இருந்தது. 2005ல், பெரு மழை பெய்தது. அதன்பின், 2015ல் பெரு மழை பெய்தது. அப்போது கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், எதிர்வரும் காலத்தில் என்ன செய்ய வேண்டும் என, திட்டம் வகுத்து செயல்படுகிறோம்.
நடிகர் கமலுக்கு, பிறந்த நாள் வாழ்த்துகள். யார் வேண்டுமானாலும், கட்சி ஆரம்பிக்கலாம்; அங்கீகாரம் தருவது மக்கள். அவர்கள் தான் இறுதி எஜமானர்கள். மக்கள், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., பக்கம் உள்ளனர். தலைவர்கள் யாரும், தொண்டர்களிடம் பணம் கேட்கவில்லை. கமல், தொண்டர்களிடம், 30 கோடி ரூபாய் கேட்கிறார். அது, என்ன கணக்கு என்று தெரியவில்லை. உலகிலேயே கட்சி துவக்க, 30 கோடி ரூபாய் கேட்டது, இவராக தான் இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...