Thursday, November 9, 2017


பயணியை தாக்கிய விமான ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு

புதுடில்லி: பயணியை தாக்கிய, தனியார் விமான நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. டில்லி விமான நிலையத்தில், அக்., 15ல், இண்டிகோ நிறுவன விமானத்தில் செல்ல, பயணி ஒருவர் வந்தார். விமானத்தில் ஏறுவதற்காக, விமான நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த பஸ்சில், பயணி ஏறினார். அப்போது, அவரை, விமான நிறுவன ஊழியர்கள் தடுத்தனர். இதையடுத்து, பயணிக்கும், ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், பயணியை கீழே தள்ளிய ஊழியர்கள், அவரது கழுத்தை பலமாக அழுத்தி உள்ளனர். இந்த சம்பவத்தை, மொபைல் போனில் படம் பிடித்த பயணி ஒருவர், அதை, சமூக வலைதளங்களில், 22 நாட்களுக்கு பின் வெளியிட்டார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர், கஜபதி ராஜு கூறுகையில், ''பயணியை, விமான நிறுவன ஊழியர்கள் தாக்கியது கண்டிக்கத்தக்கது. 

''இது குறித்து, விமான போக்குவரத்து இயக்குனரகத்திடம், அறிக்கை கேட்டுள்ளேன். பயணியை தாக்கிய ஊழியர்கள் மீது, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது,'' என்றார்.
விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர், ஜெயந்த் சின்ஹா கூறுகையில், ''இது பற்றி, இண்டிகோ நிறுவனத்திடம் அறிக்கை கேட்டுள்ளேன்,'' என்றார்.

இதற்கிடையே, நடந்த சம்பவத்துக்கு, மன்னிப்பு கேட்டுள்ள இண்டிகோ நிறுவனம், 'பயணியை தாக்கிய ஊழியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Retrospective Re-Fixing Of Salary And Pension Benefits After Retirement Is Against Law: Madras High Court

Retrospective Re-Fixing Of Salary And Pension Benefits After Retirement Is Against Law: Madras High Court Upasana Sajeev 29 Apr 2024 1:30 PM...