Thursday, November 9, 2017


90வது பிறந்த நாளை கொண்டாடினார் அத்வானி


90வது பிறந்த நாளை கொண்டாடினார் அத்வானி
புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான, எல்.கே.அத்வானி, நேற்று, 90வது பிறந்த நாளை, 90 பார்வையற்ற குழந்தைகளுடன் கொண்டாடினார்.
முன்னாள் துணை பிரதமரும், பா.ஜ., மூத்த தலைவருமான, எல்.கே.அத்வானிக்கு, நேற்று, 90வது பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு, பிரதமர், நரேந்திர மோடி உள்ளிட்ேடார் வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் ஆகியோரும், அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
''மிகப் பெரிய அரசியல் வித்தகர். தன் கடின உழைப்பால் பிறரில் இருந்து வேறுபட்டவர்; நாட்டிக்காகவே உழைத்தவர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான, ராஜ்நாத் சிங், முதல் ஆளாக நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள், சுஷ்மா சுவராஜ், ரவி சங்கர் பிரசாத், ஆனந்த் குமார், ஜயந்த் சின்ஹா உட்பட பலர் நேரில் சென்று, அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.தன், 90வது பிறந்த நாளை, 90 பார்வையற்ற குழந்தைகளுடன், தன் வீட்டில், அத்வானி கொண்டாடினார். பல்வேறு கட்சித் தலைவர்கள், பல துறை சார்ந்தவர்கள், பா.ஜ., தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024