Wednesday, November 1, 2017

நடிகை அமலாபால் கார் வாங்கியதில் துறை ரீதியில் எந்த தவறும் இல்லை: போக்குவரத்து அமைச்சர் ஷாஜஹான்


By பா.சுஜித்குமார்  |   Published on : 31st October 2017 08:17 PM  
புதுச்சேரி:  நடிகை அமலாபால் கார் வாங்கியதில் துறைரீதியில் எந்த தவறும் நடைபெறவில்லை என போக்குவரத்து அமைச்சர் எப்.ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.

அவர் செவ்வாய்க்கிழமை இரவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகத்தில் பென்ஸ்கார் வாங்கிய நடிகை அமலாபால் அதற்கு சட்டரீதியாக தற்காலிக பதிவெண் பெற்று புதுச்சேரிக்கு எடுத்து வந்து 8.8.2017ல் விண்ணப்பத்தை  சமர்ப்பித்தார். போக்குவரத்துத்துறை சட்டவிதிகள் படி ஒருவர் ஒரு வாகனத்தை பதிவு செய்ய கீழ்கண்டவற்றை  வாக்காளர் அட்டை, எல்ஐசி பாலிசி, கடவுச்சீட்டு, பள்ளி சான்று, பிறப்புச் சான்று, பிரமாண பத்திரம் ஆதாரங்களாக தாக்கல் செய்யலாம். இது இருப்பிடத்தை உறுதி செய்யும்.

அமலாபால், தனது கையெழுத்துடன் கூடிய பத்திரத்தை தாக்கல் செய்தார். திலாசுபேட்டையில் வாடகை வீட்டில் இருப்பதற்கான இருப்பிடச் சான்று தாக்கல் செய்துள்ளார். அத்துடன் எல்ஐசி பாலிசியும் இம்முகவரியில் இருந்து தந்துள்ளார்.

இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வாகனம் வாங்கலாம். அதில் போக்குவரத்து விதிப்படி தடையில்லை. கர்நாடகத்தில் வாகனம் வாங்கி தற்காலிக பதிவெண் பெற்று புதுச்சேரியில் நிரந்தர பதிவெண் பெற்றார். இங்கிருந்து வேறொரு மாநிலத்துக்கு சென்றால் அந்த மாநிலத்தில் பதிவெண் பெற ஓராண்டுக்கு கால அவகாசம் உள்ளது.

தற்போது எஸ்எஸ்பி ராஜீவ்ரஞ்சன் தலைமையில் போலீஸôர் அந்த இருப்பிடத்தில் சென்று விசாரித்தனர். அதில் தவறு இல்லை என்று தெரிந்தது. துறை ரீதியாக ஊழல் தவறு நடக்கவில்லை. சட்டரீதியாக நடந்துள்ளது.

கேரள அரசு தகவல் கேட்டால் தர தயாராக இருக்கிறோம். ஆனால் இதுவரை யாரும் கேட்கவில்லை. இதில் தவறே நடக்கவில்லை. விதிமுறைப்படிதான் நடந்துள்ளது. ஓராண்டுக்குள் பதிவெண் பெறாவிட்டால் அந்த மாநிலம் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆளுநர் தவறு நடந்ததாக எதை கூறுகிறார். ஆவணங்களை தாக்கல் செய்தவுடன் அதை சரிபார்த்து பதிவு செய்து வருகிறோம். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். ஆளுநர் எந்த நோக்கில் குற்றம் சாட்டினார் தெரியவில்லை. அனைத்து ஆவணங்களும் இருக்கின்றன. அமலாபால் வாகனம் பதிவு செய்து இரண்டரை மாதங்கள் மட்டுமே ஆகிறது. மேலும் 8 மாதங்களுக்கு மேல் கால அவகாசம் இருக்கிறது.

புதுச்சேரியில் வரி குறைவு என்பது அந்தந்த மாநிலம் எடுக்கும் முடிவு. பெட்ரúôல், டீசல், மதுபானங்கள் இங்கு விலை குறைவு. மாநில வருவாய்க்காக வரியை குறைத்து வைத்துள்ளோம். அதில் தவறு இல்லை. வரி உள்ளூர், வெளியூர் என்று இல்லை. சாலை வரி ஜிஎஸ்டியில் வரவில்லை. வரியை நிர்ணயிக்க அரசுக்கு சுதந்திரமுள்ளது.

பெட்ரோல், டீசல் விற்பனை அதிகளவு உள்ளது . வெளிமாநில வாகனங்களும் இங்கு நிரப்பி செல்கின்றனர். அது தவறு என கூற இயலாது. போலி முகவரி என்று ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுப்போம். ஆனால், அமலாபால் விவகாரத்தில் தங்கும் இடத்துக்கான சான்று தரப்பட்டுள்ளது. முகவரி பரிசோதனை போக்குவரத்துத்துறை செய்ய இயலாது.  ஆர்டிஓ வாகனம் பதிவு செய்வோர் முகவரியை ஆய்வு செய்ய வேண்டியதில்லை.

மத்திய அரசின் சட்டப்படியே செயல்படுகிறோம். முகவரியில் ஆதார் இணைக்க வேண்டும் போக்குவரத்து சட்டவிதியில் இல்லை. அவ்வாறு மத்திய அரசு உத்தரவிட்டால் அதை செய்ய தயாராக இருக்கிறோம். மாதம் தோறும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட 2 சக்கர வாகனங்களும், 650 கார்களுக்கும் பதிவெண் பெறப்படுகிறது. ஆம்னி பஸ்களுக்கு ஒரு இருக்கைக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒரு இருக்கைக்கு ரூ. 1200 செலுத்த வேண்டும். ஆம்னி பஸ்கள் மாதம் எவ்வளவு பர்மிட் பெறப்படுகிறது என்ற தகவல் தற்போது இல்லை. ஆளுநரிடம் 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்வோம்.

தவறு நடந்ததாக மாயை. தவறு நடக்கவில்லை.  தனிப்பட்ட முறையில் அவருடன் மோதலில்லை. இதுதொடர்பான முழு தகவல்கள் கேட்டால் தருவோம் என்றார் ஷாஜஹான்.

No comments:

Post a Comment

news today 23.10.1024