Wednesday, December 20, 2017

'சொத்து வாங்குவதற்கு ஆதார் கட்டாயமில்லை'

Added : டிச 19, 2017 22:03 





புதுடில்லி, 'சொத்துக்கள் பதிவு செய்யும்போது, ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.லோக்சபாவில் இது தொடர்பான கேள்விக்கு, மத்திய வீட்டுவசதி மற்றும் ஊரக விவகாரத் துறை இணையமைச்சர், ஹர்தகீப் சிங் புரி, எழுத்து மூலமாக அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:சொத்துக்களை பதிவு செய்யும் போது, ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படவில்லை. அதே நேரத்தில், சொத்துக்கள் பதிவு செய்யும்போது, விருப்பத்தின் அடிப்படையில், ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது குறித்து பரிசீலிக்கும்படி, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...