Wednesday, December 20, 2017

இன்று விடுதலையாகிறார் நீதிபதி கர்ணன்

Added : டிச 20, 2017 03:41




கோல்கட்டா: தண்டனை காலம் முடிவடைவதை அடுத்து, கோல்கட்டாவில் உள்ள சீர்திருத்த மையத்திலிருந்து நீதிபதி கர்ணன் இன்று(டிச.,20) அவர் விடுதலை செய்யப்படுகிறார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி கர்ணன், கோல்கட்டா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். பணி இடமாற்றத்தை எதிர்த்து, தானாகவே வழக்கு தொடர்ந்த அவர், அந்த உத்தரவை ரத்து செய்தார். நீதிபதிகள் மீது புகார்கள் கூறினார். இதையடுத்து, தலைமை நீதிபதி தலைமையிலான ஏழு நீதிபதிகள் அமர்வு, நீதிபதி கர்ணனுக்கு, ஆறு மாத சிறை தண்டனை விதித்து, இந்தாண்டு மே, 9ல் தீர்ப்பு அளித்தது. தலைமறைவாக இருந்த கர்ணன், ஜூன், 20ல் கைது செய்யப்பட்டு, கோல்கட்டாவில் உள்ள சீர்திருத்த மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தண்டனை காலம் முடிவடைவதை அடுத்து, இன்று அவர் விடுதலை செய்யப்படுகிறார்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...