Wednesday, December 20, 2017

பத்திர பதிவு அலுவலகங்களில் 'விஜிலென்ஸ்' சோதனை

Added : டிச 20, 2017 00:47

சென்னையில் சார் பதிவாளர் அலுவலகங்களில், 'விஜிலென்ஸ்' அதிகாரிகள், திடீர் சோதனை நடத்தினர். தமிழகத்தில், 578 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், தரகர்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாக புகார் கூறப்படுகிறது. இதை கட்டுப்படுத்த, பதிவுத்துறை தலைவர் பல்வேறு கிடுக்கிப்பிடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்; ஆனாலும், முறைகேடுகள் தொடர்கின்றன. இந்நிலையில், பதிவுத்துறை விஜிலென்ஸ் பிரிவு, உதவி ஐ.ஜி., ஸ்ரீசித்ரா தலைமையிலான தனி படையினர், சென்னை சார் பதிவாளர் அலவலகங்களில், திடீர் சோதனை நடத்தினர்.

சைதாப்பேட்டை, திருப்போரூர், பல்லாவரம் உள்ளிட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில், அதிக எண்ணிக்கையில் வெளியாட்கள் நடமாட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பதிவான பத்திரங்களிலும் ஏராளமான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பதிவுத்துறை தலைவருக்கு அறிக்கை அனுப்பப்பட உள்ளது. அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட சார் பதிவாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிய வந்துள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...