Friday, December 22, 2017

ஆர்.ஏ.சி., பயணியருக்கு போர்வை ரயில்வே வாரியம் உத்தரவு

Added : டிச 21, 2017 23:01

பிலாஸ்பூர், ரயில்களில், 'ஏசி' பெட்டிகளில், ஆர்.ஏ.சி., டிக்கெட்டில், ஒரு படுக்கையை பகிர்ந்து கொள்ளும் இரு பயணியருக்கும், போர்வை வழங்க, ரயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
ரயில்களில், 'ஏசி' பெட்டிகளில், உறுதியான முன்பதிவு டிக்கெட்டுடன் வரும் பயணியருக்கு, இரண்டு போர்வைகள், ஒரு கம்பளி, ஒரு தலையணை, ஒரு துண்டு ஆகியவை வழங்கப்படும். முதல் வகுப்பு, 'ஏசி' மற்றும், 'ஏசி சேர் கார்' பெட்டிகளில், ஆர்.ஏ.சி., டிக்கெட் பயணியர் அனுமதிக்கப்படுவதில்லை.இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு, 'ஏசி' பெட்டிகளில், ஆர்.ஏ.சி., டிக்கெட் வைத்துள்ள பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு போர்வைகள் தரப்படுவதில்லை. இந்த பெட்டிகளில், ஒரு படுக்கையை இருவர் பகிர்ந்து கொள்வர். போர்வைகள் தரப்படாததால், குளிரில் நடுங்கியபடியே, இவர்கள் பயணம் செய்வர்.இந்நிலையில், ஆர்.ஏ.சி., டிக்கெட்டுடன், 'ஏசி' பெட்டியில் பயணம் செய்யும் இரண்டு பயணியருக்கும், மற்ற பயணியருக்கு வழங்குவது போல், போர்வை, கம்பளி வழங்கும்படி, தென் கிழக்கு மத்திய ரயில்வேயின் அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும், ரயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...