Monday, December 10, 2018

அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்

Added : டிச 09, 2018 15:39 |



உதய்பூர்: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகள் திருமணத்தில் பங்கேற்க வரும் முக்கிய பிரமுகர்களை விமான நிலையத்தில் இருந்து அழைத்து செல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு விருந்தினர்கள்

நாட்டின் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும், ரியல் எஸ்டேட் நிறுவனர் அஜய் பிரமலின் மகன் ஆனந்துக்கும், 12ல், மும்பையில் திருமணம் நடக்கவுள்ளது.சங்கீதம், நாட்டியம் மற்றும் மெஹந்தி உள்ளிட்ட, திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில், 10ம் தேதி வரை நடக்கின்றன.திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க, அம்பானி குடும்பத்தினர் மற்றும் பிரமல் குடும்பத்தினர் உதய்பூர் வந்துள்ளனர்.இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழிலதிபர்கள் மட்டுமல்லாமல், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி உள்ளிட்டோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

தனியார் விமானங்கள்

சிறப்பு விருந்தினர்களை அழைத்து வர, 30 முதல் 50 தனியார் விமானங்கள் உதய்ப்பூர் மஹாராணா பிரதாப் விமான நிலையத்தில் தரையிறங்கவும், ஏறவும் உள்ளன. சாதாரண நாட்களில் இங்கு 19 விமானங்கள் தான் தரையிறங்கும்,கிளம்பி செல்லும். மேலும், சிறப்பு விருந்தினர்களை, விமான நிலையத்திலிருந்து தங்கும் இடத்திற்கு அழைத்து செல்ல ஜாக்குவார், போர்சே, மெர்சிடிஸ், ஆடி, பிஎம்டபிள்யு உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடம்பர கார்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. விமானத்தை தவிர்த்து உதய்ப்பூரில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், 600 விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். திருமணத்திற்கு, இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Declare assets online by Oct, TN govt tells staff

Declare assets online by Oct, TN govt tells staff  Julie.Mariappan @timesofindia.com 11.09.2026 Chennai: Tamil Nadu govt has made it mandato...