Monday, December 10, 2018

'நகரும் பதிவேடு' அமல்படுத்த உத்தரவு

Added : டிச 09, 2018 22:31

போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்களை கண்காணிக்கும் விதமாக, 'நகரும் பதிவேடு' அமல்படுத்த, சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாக்டர்கள், கடந்த, 4ம் தேதி, புறநோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் அறிவுரையை தொடர்ந்து, போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், டாக்டர்கள் சங்கம், நிர்வாகத்துக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால், மருந்து குறித்த விபரம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், போராட்டத்தை காரணம் காட்டி, டாக்டர்கள் பலர், முறையாக பணியில் ஈடுபடுவ தில்லை என, புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, அரசு அலுவலகங்களில் நடைமுறையில் உள்ள, நகரும் பதிவேடு முறையை, தீவிர மாக அமல்படுத்த, சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:அனைத்து தரப்பு அரசு அலுவலர்களுக்கும், இந்த நகரும் பதிவேடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அரசு அலுவலர்கள் பணி நேரத்தில் வெளியில் செல்லும்போது, இப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அனைத்து டாக்டர்களும் இந்நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

SC verdict on super speciality seats ‘historic’, says Minister

SC verdict on super speciality seats ‘historic’, says Minister He attributes the verdict to the timely filing of writ petition by T.N. gover...