Monday, December 10, 2018

வி.ஏ.ஓ.,க்கள் இன்று போராட்டம் : அதிகாரிகளுக்கு அரசு, 'அலர்ட்'

Added : டிச 09, 2018 21:34

சென்னை: கிராம நிர்வாக அலுவலர்களான, வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், இன்று போராட்டங்களை அறிவித்துள்ளதால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க, நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.சிறப்பு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல், வி.ஏ.ஓ.,க்கள், காலவரையற்ற போராட்டத்தை துவக்குகின்றனர். ரயில் நிலையங்களில், தனி கவுன்டர்களை திறக்க வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர், ரயில் நிலையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என, அறிவித்துள்ளனர்.இவ்விரு போராட்டங்களால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, மாவட்ட கலெக்டர்கள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ், எஸ்.பி.,க்களுக்கும், பொதுத் துறை செயலர் சுற்றறிக்கை அனுப்பிஉள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024