Thursday, December 13, 2018

மனைவியை கைவிட்ட என்.ஆர்.ஐ.,க்களின் பாஸ்போர்ட்கள் ரத்து

Added : டிச 12, 2018 22:39 |






புதுடில்லி: மனைவியரை கைவிட்ட, என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், 33 பேரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்திய பெண்களை திருமணம் செய்யும், என்.ஆர்.ஐ., கணவர்கள், அவர்களை பாதியிலேயே கைவிட்டு விடுவதாக, வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.இதன்படி, கணவர்களால் கைவிடப்பட்ட இந்திய பெண்கள் அளித்த புகார்களில், இதுவரை, 33 என்.ஆர்.ஐ.,க்களின் பாஸ்போர்ட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.மேலும், என்.ஆர்.ஐ., திருமணங்களை ஒரு வாரத்தில் பதிவு செய்தல் மற்றும் பதிவு செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, மத்திய அமைச்சரவையின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2026

  UP student (19) ‘bitten by snake’ 6 times in 6 weeks; family baffled  20.09.2026 Muzaffarnagar: For a 19-year-old BSc student from Hathras...