Saturday, May 2, 2015

சிறப்பு தள்ளுபடி விலையில் ஆவின் நெய் விற்பனை



தமிழகம் முழுவதும் இன்று (மே 1) முதல் சிறப்புத் தள்ளுபடி விலையில் ஆவின் நெய் விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பாக ஆவின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆவின் நிறுவனம் 2-ம் வெண்மை புரட்சியை செயல்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் பால் கொள்முதல் நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் என்ற இலக்கை எட்டியுள்ளது. இத்தருணத்தில் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் ஆவின் நெய்க்கு சிறப்பு தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இது மே 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த சிறப்பு தள்ளுபடி விலை தமிழகம் முழுவதுக்கும் பொருந்தும். இந்த சலுகை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். அதனால் இந்த சலுகையை நுகர்வோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024