Sunday, July 24, 2016

கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன்களில் அதிகரித்து வரும் 'ரேன்சம்வேர்' தாக்குதல்; தாக்குதலுக்கு ஆளாகும் டாப்-10 நாடுகளில் இந்தியா

DAILY THANTHI


புதுடெல்லி,

உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களில் அதிகரித்து வரும் ’ரேன்சம்வேர்’ தாக்குதல் பற்றி பிரபல சைபர் பாதுகாப்பு நிறுவனமான 'சிமண்டெக்' வெளியிட்டிருக்கும் தகவல்கள் பின்வருமாறு:-

கடந்த சில ஆண்டுகளாக இண்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் மூலமாக பயனர்களை ஏமாற்ற தகவல் திருடர்கள் 'ரேன்சம்வேர்' (Ransomware) என்ற மால்வேரை பரப்பி வருகின்றனர். இந்த மால்வேர் நிரல்கள் ஒருமுறை நம் கம்ப்யூட்டரில் வந்துவிட்டால், அவை ஒட்டுமொத்த கம்ப்யூட்டரையும் முடக்கி விடும். பிறகு, பணம் செலுத்துவதற்காக ஒரு 'பாப்-அப் மெசேஜ்'-ஐ காண்பிக்கும். இதை கிளிக் செய்து அது கேட்கும் பணத்தை செலுத்திய பிறகே கம்ப்யூட்டரை மீண்டும் 'அன்லாக்' செய்ய முடியும். கம்ப்யூட்டர் மட்டுமின்றி தற்போது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் இதன் தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன.

பணம் பறிக்கும் நோக்கில் பரப்பப்படும் இந்த மால்வேர்கள் பெரும்பாலும், வியாபார நிறுவனங்களையே குறிவைக்கிறது. 2015-ம் ஆண்டு நிலவரப்படி ரேன்சம்வேரை பரப்பிய பின் கம்ப்யூட்டர்களை விடுவிக்க ஹேக்கர்கள் சராசரியாக 679 டாலர்களை வரை கேட்கின்றனர். இந்த வகை மால்வேர் தாக்குதல்களுக்கு அதிக அளவில் ஆளாகும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட புதிய ரேன்சம்வேர்களை கண்டறிந்துள்ளோம். குறிப்பாக, இந்த ஆண்டு கிரிப்டோ-ரேன்சம்வேர் அண்மையில் கண்டறியப்பட்ட புதிய வகை. இது கம்ப்யூட்டரை முடக்கிவிட்டால் அதை அன்லாக் செய்வது என்பது முடியாத ஒன்று. முறையாக பேக் அப் செய்திருக்காவிட்டால் ஹேக்கர்களுக்கு பணம் செலுத்துவது ஒன்றே வழியாக இருக்கும்.

இவ்வாறு சிமண்டெக் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024