Monday, July 4, 2016

கொலை செய்ய துணிந்தவர்; ஆனால், தற்கொலை செய்ய அஞ்சிய ராம்குமார்

DINAMANI

சென்னை: சுவாதியை கொலை செய்த பின்பு தற்கொலை செய்துகொள்ள அச்சம் ஏற்பட்டதால் ராம்குமார் சொந்த ஊருக்குத் திரும்பி பதுங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: சென்னை மென்பொருள் பொறியாளர் சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் சிகிச்சையில் இருந்ததால் அவரிடம் தொடர் விசாரணை நடத்த முடியவில்லை. சனிக்கிழமை மாலை முதல் இரவு வரை நேரம் கிடைத்தபோது கொஞ்சம் கொஞ்சமாக கேள்விகள் கேட்கப்பட்டன. இருப்பினும் அவர் சில கேள்விகளுக்கு மட்டுமே லேசான பதில் கூறினார். பிறகு சைகைகளைக் காட்டினார்.

"சென்னைக்கு வேலை தேடிச் சென்றபோது சூளைமேடு பகுதியில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் சுவாதியைப் பார்த்தேன். அப்போது அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அதனைக் கூற அவரை அடிக்கடி பின்தொடர்ந்தேன். ஒருநாள் நான் பின்தொடர்வதை அறிந்த அவர், பெற்றோர் மற்றும் போலீஸாரிடம் தெரிவித்து விடுவதாக எச்சரித்தார்.

மேலும், எனது முக அழகு குறித்து குறை கூறினார். அதனால் எனக்கு மிகுந்த ஆத்திரம் ஏற்பட்டது. எனது அழகை குறை கூறியதால் தாக்க முயன்றபோது கொலை நிகழ்ந்துவிட்டது. அதன்பின்பு நானும் தற்கொலை செய்யவே முடிவு செய்தேன்.

ஆனால், எனக்கு தற்கொலை செய்ய அச்சம் ஏற்பட்டதால் அங்கிருந்து சொந்த ஊருக்குத் தப்பிவந்து பதுங்கினேன். அங்கு என்னை போலீஸார் கைது செய்ய வந்தபோது வேறு வழியில்லாமல் கழுத்தில் காயத்தை ஏற்படுத்தினேன் என போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...