Sunday, July 17, 2016

போலீஸிடம் ராம்குமார் வாக்குமூலம்: 'சுவாதியை நான் மட்டுமே கொலை செய்தேன்; வேறு யாருக்கும் தொடர்பில்லை' - 3 நாள் போலீஸ் காவல் முடிந்து புழல் சிறையில் அடைப்பு


Return to frontpage

சுவாதியை நான் மட்டுமே கொலை செய்தேன். இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று ராம்குமார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீஸார் கூறினர்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி ஐடி பெண் ஊழியர் சுவாதி(24) வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட் டம் செங்கோட்டையை சேர்ந்த ராம் குமார்(24) கைது செய்யப்பட்டார்.

ராம்குமாரிடம் போலீஸ் காவலில் 3 நாட்கள் விசாரணை நடத்த எழும்பூர் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. 13-ம் தேதி மாலை முதல் நேற்று மாலை வரை ராம்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். 3 நாட்களும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து ராம்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. துணை ஆணையர் பெருமாள், ரயில்வே போலீஸ் எஸ்.பி. விஜயகுமார், நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் தேவராஜ் மற்றும் தனிப்படையினர் ராம்குமாரிடம் விசாரணை நடத்தினர். நேற்று மாலையில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வந்த மருத்துவக் குழுவினர், அவரது கழுத்தில் உள்ள காயத்தை பரிசோதனை செய்தனர்.

நீதிபதி விசாரணை

நேற்றுடன் போலீஸ் காவல் முடிந்ததை தொடர்ந்து நேற்று மாலை 4.30 மணியளவில் மூர் மார்க்கெட் அல்லிக்குளத்தில் செயல்படும் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்துக்கு ராம்குமாரை போலீஸார் அழைத்து வந்தனர். நீதிபதி கோபிநாத் முன்பு அவரை ஆஜர்படுத்தினர். அப்போது போலீஸ் காவலில் ராம்குமார் அளித்த வாக்குமூலத்தை நீதிபதி யிடம் போலீஸார் சமர்ப் பித்தனர். வாக்குமூலத்தை போலீ ஸார் வீடியோ எடுத்துள்ளனர். அதன் சிடியையும் சமர்ப்பித்தனர். பின்னர் ராம்குமாரிடம் சுமார் அரை மணி நேரம் நீதிபதி கோபிநாத் தனியாக விசாரணை நடத்தினார். பின்னர் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறை யில் ராம்குமார் அடைக்கப்பட்டார். ராம்குமாரை வருகிற 18-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க ஏற்கெனவே நீதிபதி உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராம்குமார் வாக்குமூலம்

போலீஸ் காவலில் ராம்குமாரிடம் சுவாதியுடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி? அவரை கொலை செய்வதற்கு வேறு யாராவது உதவி செய்தார்களா? போன்ற பல கேள்விகளை போலீஸார் கேட்டுள்ளனர். “எனது காதலை நிராகரித்ததாலும், என்னையும் எனது குடும்பத்தையும் சுவாதி தவறாக பேசியதாலும்தான் அவரை வெட்டினேன். நான் மட்டுமே தனியாக முடிவு செய்து இந்த கொலையை செய்தேன். இந்த கொலைக்கும் வேறு யாருக்கும் தொடர்பில்லை” என்று ராம்குமார் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சுவாதியின் நண்பர் பிலால் மாலிக்கிடமும் போலீஸார் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தினர். சுவாதியை பற்றிய நிறைய தகவல்கள் பிலாலுக்கு தெரிவதால் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். ராம்குமார் கூறும் தகவல்களை பிலால் மாலிக்கிடம் கேட்டு, அதுபற்றி சுவாதி ஏதாவது கூறியிருக்கிறாரா என்று போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

சுவாதி அலுவலகம் மற்றும் வீட்டில் பயன்படுத்திய லேப்டாப், பிரின்டர், செல்போன் ஆகியவற்றில் உள்ள தகவல்களை பெறுவதற்காக ஐதராபாத்தில் உள்ள ஆய்வுக் கூடத் துக்கு போலீஸார் அனுப்பியுள்ள னர். அதில் என்னென்ன தகவல்கள் கிடைத்தன என்பதை போலீஸார் இதுவரை வெளியிடவில்லை. “சுவாதி கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து அவரது செல் போனையும் கொலையாளி எடுத்து சென்றார். எனவே, யாருக்கோ தேவையான ஒரு தகவல் சுவாதிக்கு தெரிந்துள்ளது. அதை அவர் தனது லேப்டாப்பில் வைத்து இருந்திருக்கலாம். அந்த தகவல் வெளியே தெரியாமல் இருக்க சுவாதியை கொலை செய்ய முடிவு செய்து, அதற்கு ராம்குமாரை பயன்படுத்தி இருக்கலாம்.

சுவாதியை கொலை செய்வதற்கு முன்பு 20, 21-ம் தேதிகளில் ராம்குமார் ஆந்திர மாநிலம் சென்று வந்திருக்கிறார். இந்த கொலை சம்பவத்தில் ராம்குமார் ஒரு அம்பாக மட்டுமே செயல்பட்டு இருக்கிறார். அவரை எய்த வில் வேறு எங்கோ உள்ளது” என்று சிலர் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர். இந்த தகவல் சமூக வலை தளங்களில் இப்போது அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...