Friday, July 15, 2016

சுவாதி கொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம்: ராம்குமார் அளித்துள்ள வாக்குமூலம் பதிவு


ரயில் நிலையத்துக்கு சென்று நடித்துக் காட்டுகிறார்

‘சுவாதியை நான்தான் கொலை செய்தேன்’ என்று ராம்குமார் அளித் துள்ள தெளிவான வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்று நடிக்க வைத்து வீடியோவில் பதிவு செய்யவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி (24) கடந்த மாதம் 24-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் செங் கோட்டை அடுத்த டி.மீனாட் சிபுரத்தை சேர்ந்த ராம் குமார் (24) கடந்த 1-ம் தேதி கைது செய்யப்பட்டார். போலீஸார் பிடிக்க முயன்றபோது பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு அவர் தற் கொலைக்கு முயன்ற தாக கூறப்படு கிறது. போலீஸார் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக் கப்பட்டுள்ளார்.

அவரை 3 நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, 13-ம் தேதி மாலை முதல் ராம்குமாரிடம் நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திரா சென்றது ஏன்?

சுவாதியுடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி? அவரை கொலை செய்ய வேறு யாராவது உதவி செய்தார்களா? என்பது போன்ற பல கேள்வி களை ராம்குமாரி டம் போலீ ஸார் கேட்டுள்ளனர். சுவாதி கொலைக்கு முன்பு, 20, 21-ம் தேதி களில் ராம்குமார் ஆந்திர மாநிலம் சென்று வந்துள் ளார். அங்கு சென்று வந்தது ஏன்? கொலை செய் யச் சொல்லி வேறு யாரும் தூண்டி னார்களா? என்றும் ராம்குமாரிடம் போலீஸார் கேட்டுள்ளனர்.

‘நான்தான் கொன்றேன்’

விசாரணைக்குப் பிறகு, ‘கொலையை நான்தான் செய்தேன்’ என்று ராம்குமார் ஒப்புக்கொண்ட தாகவும், அவரது வாக்குமூலத்தில் அது தெளிவாக இருப்பதாகவும் போலீஸார் தெரி வித்துள்ளனர். ராம்குமார் வாக்கு மூலம் கொடுக் கும்போது அதை ரிக்கார்டு செய்து வைத்திருக்கி றோம். யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் அவரே கொடுத்த வாக்குமூலம் அது என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

ரகசிய இடத்தில்தான் ராம்குமா ரிடம் விசாரணை நடந்தது. நேரில் நடித் துக் காட்டுவதற்காக நுங்கம்பாக்கம் காவல் நிலை யத்துக்கு அவரை போலீஸார் நேற்று காலை அழைத்து வந்தனர். மேஜை முன்பாக இருந்த சேரில் அவரை உட்கார வைத்து, உதவி ஆணையர் தேவராஜ் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

சுவாதி கொலை நடந்த நுங்கம் பாக்கம் ரயில் நிலையத்துக்கு ராம் குமாரை நேரில் அழைத்துச் சென்று, கொலை செய்தது எப்படி என்று நடித்துக் காட்டுவதற்கான ஏற்பாடு கள் தீவிரமாக நடந்தன. ஆனால் செய்தியாளர்கள் அதிக அளவில் கூடியதால், அந்த திட் டத்தை போலீஸார் ஒத்திப்போட் டனர்.

நள்ளிரவு அல்லது இன்று அதிகாலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்று நடித்துக் காட்டச்சொல்லி விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய் துள்ளனர். அதை போலீஸார் வீடியோ எடுத்து, நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள். அவர் தங்கி யிருந்த மேன்ஷனுக்கும் அழைத் துச் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

இதற்கிடையில், சுவாதி பற்றிய பல தகவல்கள் அவரது நண்பர் பிலால் மாலிக்குக்கு தெரிவதால், அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராம்குமார் கூறும் தகவல்களை பிலால் மாலிக்கிடம் கேட்டு, அதுபற்றி சுவாதி அவரிடம் ஏதாவது கூறி யிருக்கிறாரா என்று போலீஸார் விசாரிக் கின்றனர். போலீஸாருக்கு உதவும் வகையில் பிலால் மாலிக் கும் நேற்று காலை முதல் மாலை வரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலேயே இருந்தார்.

போலீஸ் காவல் முடிகிறது

ராம்குமாருக்கு வழங்கப்பட்ட 3 நாள் போலீஸ் காவல் இன்று டன் முடிகிறது. இன்று மாலை 5 மணி அல் லது அதற்கு முன்பாக எழும்பூர் நீதி மன்றத்தில் ராம்கு மாரை போலீஸார் ஆஜர்படுத்து வர். அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக் கப்படுவார்.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...