Monday, July 18, 2016

சிபிஎஸ்இ அறிவிப்பு

பலத்த மழை பெய்தாலும் திட்டமிட்டபடி மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு 24-ம் தேதி நடக்கும்: சிபிஎஸ்இ அறிவிப்பு


பலத்த மழை பெய்தாலும் திட்ட மிட்டபடி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் 24-ம் தேதி நடைபெறும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான இரண்டாம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) வரும் 24-ம் தேதி நாடுமுழுவதும் நடக்கிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தேர்வு நடத்துகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கோயம்புத்தூர், நீலகிரி போன்ற மாவட்டங்களிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். கேரளா மற்றும் வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால், திட்டமிட்டபடி தேர்வு நடக்குமா அல்லது தேர்வு தள்ளிப்போக வாய்ப்புள்ளதா என்று மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய இடை நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஜூலை 24-ம் தேதி நடக்கிறது. அப்போது பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கலாம். பலத்த மழை பெய் தாலும் தேர்வு திட்டமிட்டபடி நடை பெறும். அதனால் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் முன்கூட்டியே சென்று தேர்வு மையம் எங்கு உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வானிலை நிலவரம், போக்குவரத்து, தேர்வு மையத்தின் இடம் உள்ளிட்ட அம்சங்களை கணக்கில் கொண்டு மாணவர்கள் முன்கூட்டியே வீட்டில் இருந்து புறப்பட வேண்டும். வெளியூர்களை சேர்ந்த மாணவர் கள் எந்த பகுதியில் தேர்வு மையம் அமைந்திருக்கிறதோ, அந்த பகுதிக்கு முன்கூட்டியே சென்று விட வேண்டும். காலை 9.30 மணிக்கு மேல் தேர்வு மையத் திற்கு வரும் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக் கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...