Monday, July 4, 2016

சுவாதி கொலை வழக்கு: ராம்குமாரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு

THE HINDU

சுவாதியை கொலை வழக்கில் கைதான ராம்குமாரை வரும் 18-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் 14-வது நீதிமன்றத்தின் பொறுப்பு மாஜிஸ்திரேட் கோபிநாத் ஆணையிட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி பெண் இன்ஜினீயர் சுவாதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, செங்கோட்டை அருகே தனது வீட்டில் பதுங்கியிருந்த ராம்குமார் என்ற இளைஞரை கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

போலீஸார் பிடிக்க முயன்ற போது, ராம்குமார் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். சுவாதி கொலை வழக்கு விசாரணை சென்னையில் நடைபெறுவதால் ராம்குமாரை இங்கு கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்காக, நெல்லை சென்ற சென்னை தனிப்படை போலீஸார், நீதிபதி மற்றும் டாக்டர்களின் அனுமதி பெற்று ராம்குமாரை சென்னை அழைத்துவந்தனர்.



நெல்லையில் இருந்து ஆம்புலன்ஸில் சென்னை கொண்டுவரப்பட்ட அவர் தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையிலேயே விசாரணை...

இந்நிலையில், இன்று காலை எழும்பூர் குற்றவியல் 14-வது நீதிமன்றத்தின் பொறுப்பு மாஜிஸ்திரேட் கோபிநாத், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்து ராம்குமாரிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்குப் பின் ராம்குமாரை வரும் 18-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க அவர் உத்தரவிட்டார்.

நலமாக இருக்கிறார்:

ராம்குமாரை சோதித்த சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் காது.மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் ராம்குமார் உடல் நலன் தேறி வருவதாகக் கூறினார். காயம் ஆறி வருவதாகவும் கூறினார்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...