Thursday, August 3, 2017

மானாமதுரை-சிவகங்கை ரோடு புதுப்பிக்க சர்வே பணி துவக்கம்

பதிவு செய்த நாள் 02 ஆக

2017
22:25

 மானாமதுரை மானாமதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் ரோட்டில் அண்ணாத்துரை சிலையிலிருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரையும் ,சிப்காட்டிலிருந்து- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை வரை ரோட்டில் குண்டும்,குழியுமாக இருப்பதினால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருவதாகவும்,மேலும் ரோடு ஓரங்களில் மணல் குவியல் அள்ளப்படாமல் இருப்பதால் அந்த வழியாகச் சைக்கிள், டூவீலர்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி காயமடைந்து வருவதாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறையினர் காந்தி சிலை பகுதியில்
புதிதாகரோடு போடுவதற்காக சர்வே பணி மேற்கொண்டனர்.இது குறித்து நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஒருவரிடம் கேட்ட போது: இந்த ரோடு தற்போது    தான் மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.இதனையடுத்து சேதமடைந்த ரோட்டை சீரமைக்க தற்போது சர்வே பணி நடந்து வருவதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Man gets 7-yr jail for holding two govt jobs Continued To Draw Pay From Health, Edu Depts

Man gets 7-yr jail for holding two govt jobs Continued To Draw Pay From Health, Edu Depts  TIMES NEWS NETWORK 11.03.2022 Lucknow : A local c...