Friday, August 11, 2017

டாக்டர்கள் பரிந்துரை இன்றி மருந்து, மாத்திரை வழங்க தடை

பதிவு செய்த நாள்10ஆக
2017
21:52



சேலம்: ''டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகளை வழங்க வேண்டாம் என, மருந்து கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்று, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க பொதுச் செயலர், செல்வம் கூறினார்.

இது குறித்து, அவர் கூறியதாவது: தமிழகத்தின் முக்கிய நகரங்களில், டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள, 33 ஆயிரம் மருந்து கடைகளிலும், காய்ச்சலுக்காக மருந்து, மாத்திரைகளை கேட்டு வரும் நோயாளிகளுக்கு, தவிர்க்க முடியாத காரணமாக இருந்தால், ஒரு வேளைக்கு மட்டும் மாத்திரைகள் வழங்கப்படும்.
காய்ச்சலின் தன்மையை கருதி, நோயாளிகள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற, தேவையான அறிவுரைகளை எங்களின் சங்க உறுப்பினர்கள் வழங்குவர். நகர, கிராம பகுதியில் உள்ள மக்கள், சுய மருத்துவ சிகிச்சையை தவிர்க்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, குறிப்பிட்ட பகுதிகளில், காய்ச்சலின் தாக்கம் அதிகம் இருப்பின், அது குறித்து சுகாதாரத் துறையின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல அறிவுரை வழங்கி உள்ளோம்.

டெங்கு காய்ச்சல் பரவுவதையும், அதனால் ஏற்படும் உயிரிழப்பை தடுத்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளோம்.
டாக்டர்களின் பரிந்துரைசீட்டு இல்லாமல், மருந்து, மாத்திரைகள் வழங்க வேண்டாம் என, மருந்து கடைகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...