Friday, August 11, 2017

நீட் தேர்வு: தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி

பதிவு செய்த நாள்11ஆக
2017
12:41




புதுடில்லி: நீட் தேர்வில், தமிழக பாடதிட்டத்தில் 85 சதவீத உள் ஒதுக்கீடுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
மருத்துவ படிப்பில் சேர மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சிபிஎஸ்இ மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட், உள் ஒதுக்கீடு வழங்கும் உத்தரவை ரத்து செய்தது. 

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அவசர வழக்காக விசாரித்த சுப்ரீம் கோர்ட், மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், 85 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது. மாநில பாட திட்டம், சி.பி.எஸ்.இ., பாட திட்டம் என மாணவர்களுக்கு இடையே பாரபட்சம் காட்டுவதை ஏற்க முடியாது. சமநிலை முறை வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. வேறுபாட்டை அதிகபடுத்தும் நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்தது ஏன் என கேள்வி எழுப்பினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024