Tuesday, August 15, 2017


நீட் பிரச்சினையால் சித்தா, ஆயுர்வேதா படிக்க ஆர்வம் அதிகரிப்பு: 10 நாட்களில் 5,000 விண்ணப்பங்கள் விற்பனை

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதால் சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட 5 மற்ற படிப்புகளைப் படிக்க மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. 10 நாட்களில் 5,000 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.

தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு 6 அரசு கல்லூரிகளில் 390 இடங்கள் உள்ளன. அதே போல் தனியார் கல்லூரிகள் 22-ல் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 850 இடங்கள் உள்ளன.இந்நிலையில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருந்து, ஓமியோபதி, பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ், பட்டப்படிப்புகளுக்கான 2017-18 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த 2-ம் தேதியன்று தொடங்கியது.இதில் கடந்த 10 நாட்களில் 5,000 விண்ணபங்கள் விற்பனை ஆகின. வரும் 30-ம் தேதி முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறவுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வரும்31-ம் தேதி மாலை 5 மணிக்குள் செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம், அறிஞர் அண்ணா அரசினர் மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம் சென்னை-600 016 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.ஆனாலும் இந்திய மருத்துவம், ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறும்போது, அடுத்த ஆண்டு முதல் இந்தப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது என்றனர்.

No comments:

Post a Comment

T.N. govt. to launch health insurance for the elderly

T.N. govt. to launch health insurance for the elderly The Hindu Bureau CHENNAI. 18.08.2026 Tamil Nadu will launch the ‘Chief Minister’s Elde...