Saturday, August 12, 2017


அரசியல்வாதிகளால் கடும் மன உளைச்சல் ரயில் முன் பாய்ந்து கலெக்டர் தற்கொலை

பதிவு செய்த நாள்11ஆக
2017
23:43




காஜியாபாத்: உ.பி.,யில் தற்கொலை செய்த, பீஹார் மாநில, ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் உடல், காசியாபாத் ரயில் நிலையம் அருகே, தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது.

உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் காசியாபாத் ரயில் நிலையத்திலிருந்து, 1 கி.மீ., தொலைவில், ரயில் தண்டவாளத்தில், ஆண் சடலத்தை மீட்ட ரயில்வே போலீசார், அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அருகில் கிடந்த, தற்கொலை குறிப்பை படித்த போது, அங்கு கண்டெடுக்கப்பட்ட உடல், பீஹார் மாநிலம், பக்சர் மாவட்ட கலெக்டர், முகேஷ் பாண்டேயுடையது என தெரிய வந்தது.

நம்பிக்கை இழப்பு : தற்கொலை குறிப்பில் எழுதப்பட்டிருந்ததாவது:பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான எனக்கு, வாழ்வின் மீதான பிடிப்பு போய்விட்டது. மனிதர்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன். கடும் மன உளைச்சலால் அவதிப்படும் நான், இனியும் வாழ்வதில் பயனில்லை. என் தற்கொலைக்கான காரணம் குறித்து, விரிவான விபரங்களை, நான் தங்கியிருந்த அறையில் உள்ள பையில் வைத்துள்ளேன். தற்கொலை செய்வதை தவிர, எனக்கு வேறு வழி தெரியவில்லை.இவ்வாறு அதில் எழுதப்பட்டிருந்தது.

இரங்கல் : முகேஷ் தங்கியிருந்த ஓட்டலின் ஊழியர்கள் மற்றும் அவரின் நண்பர்களிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர். முகேஷ் பாண்டேயின் தற்கொலைக்கு, ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், இரங்கல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...