Saturday, August 12, 2017

நெல்லை இளைஞர் மரணம் : கேரள டாக்டர்கள் கைது?
பதிவு செய்த நாள்12ஆக
2017
00:21

திருவனந்தபுரம்: சிகிச்சை கிடைக்காமல், கேரளாவில், நெல்லை
இளைஞர் இறந்த சம்பவம் தொடர்பாக, மருத்துவமனைகளில் பணியில் இருந்த டாக்டர்களை கைது செய்ய, போலீசார் சட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன், 21, சமீபத்தில், கேரள மாநிலம், கொல்லத்தில், விபத்தில் சிக்கினார். அவருக்கு, கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைகளில் இருந்த டாக்டர்கள், சிசிச்சை அளிக்க மறுத்து விட்டனர். 

தனியார் மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை மறுக்கப்பட்டது. இதனால், ஏழு மணி நேர போராட்டத்துக்கு பின், ஆம்புலன்சிலேயே, முருகன் உயிர் பிரிந்தது.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு, கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான, பினராயி விஜயன், சட்டசபையில் பகிரங்க மன்னிப்பு கோரினார். 

இந்நிலையில், முருகனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, இரக்கமில்லாமல் செயல்பட்ட டாக்டர்களை கைது செய்ய, போலீசார் சட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில், டாக்டர்கள் கைது செய்யப்படுவர் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...