Friday, August 18, 2017

வெளிநாட்டுக்கு அழைத்து சென்று மோசடி
பதிவு செய்த நாள்17ஆக
2017
22:21


காரைக்குடி, அரியக்குடி கண்ணப்பனார் தெருவை சேர்ந்தவர் விஜயாள்,45. இவரது மகன் விஜய் என்பவரை கடந்த 2016 அக்டோபரில் துபாய்க்கு ஆறாவயல் பாப்பான் வயலை சேர்ந்த கருப்பையா மகன்கள் ரகுலிங்கம், பிரபு இருவரும் ரூ.80 ஆயிரம் பெற்று அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு சொன்ன வேலையை வாங்கி கொடுக்காமல் கட்டட வேலைக்கு அனுப்பியுள்ளனர். அதுமட்டுமன்றி வேலை பார்த்ததற்கான சம்பளம், பாஸ்போர்ட்டை வழங்கவில்லை. இதை தொடர்ந்து அங்குள்ள இந்திய துாதரக அதிகாரிகளிடம் விஜய் புகார் செய்தார். 

அவர்கள் புகாரை காரைக்குடிக்கு அனுப்பினர்.விஜயாள் புகாரின் பேரில், தெற்கு எஸ்.ஐ.அரவிந்தராஜன் வழக்கு பதிந்தார்.

புகாரில் கூறியிருப்பதாவது: எவ்வித உரிமமும் இன்றி போலியாக தன் மகனை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று ஏமாற்றி விட்டனர், எனவே கருப்பையா, அவரது மகன்கள் ரகுலிங்கம், பிரபு ஆகிய மூவர் மீது நடவடிக்கை எடுத்து, தனது மகனை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

State government to take legal action over deemed university status for three private medical colleges

State government to take legal action over deemed university status for three private medical colleges Health Minister K.G. Arunraj at the i...