Monday, August 14, 2017



6 முக்கிய சட்டங்களுக்கு  ஜனாதிபதி ராம்நாத் ஒப்புதல்

புதுடில்லி:ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், பதவியேற்ற மூன்று வாரங்களில், ஆறு முக்கிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.



ராம்நாத் கோவிந்த், ஜூலை, 25ல், ஜனாதிபதி யாக பதவியேற்றார்.பார்லிமென்டில், சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட, முக்கியத்துவம் வாய்ந்த ஆறு சட்டதிருத்தங்களுக்கு, அவர் ஒப்புதல் அளித்துள்ளார். கடற்பகுதிகளில் நடக்கும்


குற்றங்களுக்காக கைது செய்யப்படுவோர் தொடர் பான வழக்குகளை விசாரிப்பதற்கான, அதிகார வரம்பை நீட்டிக்கும் சட்டதிருத்தம், அவற்றில் முக்கியமானது.இதைத்தவிர, 127 ஆண்டு பழமை யான, காலனி ஆதிக்க கோர்ட்டுகளின் அட்மிரல் சட்டம், 156 ஆண்டு பழமையான, அட்மிரல் கோர்ட் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்யும் சட்ட திருத் தத்துக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்து உள்ளார்.

இதற்கான சட்டதிருத்தம், ஏப்., 24ம் தேதி, ராஜ்யசபா வில் நிறைவேறியது; லோக்சபா வில்,மார்ச், 10ம் தேதி, சட்டதிருத்தம் நிறைவேறியது. குழந்தை களுக்கு, இலவச, கட்டாய கல்வி பெறுவதற்கான உரிமை அளிக்கும் சட்டதிருத்தம், ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுள்ளது. ஜம்மு - காஷ்மீரில், சமூக - பொருளாதாரம் உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க அதிகாரம் அளிக்கும் சட்டத்துக்கு ஒப்புதல்

தரப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப கல்வி மையங்கள் சட்டம், தேசிய தொழில்நுட்ப கல்வி மையம், அறிவியல் கல்வி, ஆராய்ச்சி சட்டம் ஆகியவற்றுக்கும், ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...