Saturday, August 12, 2017


மனித நேயமும் மரித்ததா... ஆம்புலன்சுக்கு தவித்த குடும்பம்

பதிவு செய்த நாள்12ஆக
2017
00:58




பெரம்பலுார்:நோயால் இறந்த கணவரின் உடலை, வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படாததால், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மனைவி, குழந்தைகள், நான்கு மணி நேரம் மருத்துவமனை வளாகத்தில் தவித்தனர். -

அரியலுார் மாவட்டம், கீழசிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ், 55. காச நோயால், மிகவும் அவதிப்பட்ட இவரை, நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு, மனைவி ராணியும், மூன்று குழந்தைகளும், 108 ஆம்புலன்சில், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மருத்துவமனை வராண்டாவில், ஆம்புலன்ஸ் ஸ்டெரச்சரில் இருந்த துரைராஜை டாக்டர் பரிசோதித்தார். துரைராஜ் இறந்து விட்டதாகவும், வீட்டுக்கு எடுத்துச் செல்லும்படியும் டாக்டர் கூறியுள்ளார். கணவர் உடலை எப்படி எடுத்துச் செல்வது, ஆம்புலன்சுக்கு பணம் வேண்டுமே, என்ன செய்வது என்று வழி தெரியாத ராணி, 9 - 11 வயதுடைய தன் மூன்று குழந்தைகளுடன், இரவு, 9:30 மணி வரை, கதறி அழுதபடி நின்றிருந்தார்.
மருத்துவமனை ஊழியர் களிடம், இலவச ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தருமாறு கதறியுள்ளார்; 

அவர்களும் கண்டுகொள்ள வில்லை. இதை பார்த்து, மருத்துவமனையில்
சிகிச்சையில் இருந்தவர்கள், திரண்டனர்.அதில் ஒருவர், மொபைல் போனில் படமெடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள், இரவு, 9:45 மணிக்கு துரைராஜ் உடலை, மருத்துவமனையின் பிணவறைக்கு எடுத்துச் சென்றனர்.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...