Monday, August 14, 2017



வாக்காளர் பட்டியலில் பெயர்  ஆர்வம் காட்டாத என்.ஆர்.ஐ.,


புதுடில்லி: என்.ஆர்.ஐ., என ஆங்கிலத்தில் சுருக் கமாக அழைக்கப்படும்,வெளிநாடு வாழ் இந்தியர்கள், வாக்காளர் பட்டியலில், தங்கள் பெயர்களை, 'ஆன்லைனில்' பதிவு செய்ய, தேர்தல் ஆணையம் வசதி அளித்த போதிலும், 24 ஆயிரம் பேர் மட்டுமே, இதுவரை பதிவு செய்து உள்ளனர்.





வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியாத வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டில் இருந்தபடியே, தேர்தல் ஆணைய இணைய தளத்தில், 'ஆன்லைனில்' பதிவு செய்து கொள்ள லாம்.இதன்படி, வேறு நாடுகளில் குடியு ரிமை பெறாத, வெளிநாடு வாழ் இந்தியர்கள், வாக் காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியும்; இந்தியா வில் அவர்களது வசிப்பிடம் உள்ள தொகுதியில் பெயரைபதிவு செய்து கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த பின், அவர் களுக்கு, தேர்தல் ஆணையம் தகவலை அளிக்கும்; அவர்கள் தொகுதிக்கு வந்து, பாஸ் போர்ட்டை காண் பித்து, ஓட்டுப் போட முடியும்.இந்த வசதியை பயன் படுத்தி 24 ஆயிரத்து,348 பேர் மட்டுமேஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 23 ஆயிரத்து, 556 பேர், கேரளாவை சேர்ந்தவர்கள்; 364 பேர், பஞ்சாபை யும், 14 பேர்,குஜராத்தையும் சேர்ந்தவர்கள்.

புதிய சட்டம்:

தேர்தலில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆர்வமு டன் ஓட்டளிக்கும் வகையில், புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது; இது, நடைமுறைக்கு வரும்போது, வெளிநாடு வாழ்

இந்தியர்கள், அங்கிருந்தபடியே, தங்களுக்கு பதிலாக வேறு ஒருவரை, ஓட்டுச்சாவடிக்கு அனுப்பி, ஓட்டுப்போட முடியும்.

செலவு செய்து, இந்தியாவிற்கு வர வேண்டிய தேவை இல்லை என்பதால், இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த பின், வெளிநாடு வாழ் இந்தியர்கள், தேர்தலில் ஓட்டுப்போட ஆர்வம் காட்டலாம்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...