Thursday, November 9, 2017


மல்லையாவுக்கு கடைசி வாய்ப்பு







புதுடில்லி: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் ஆஜராகாததால், பிரபல தொழிலதிபர், விஜய் மல்லையாவை, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கும் நடவடிக்கைகளை துவங்க, டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடைசி வாய்ப்பாக, டிச., 18ல் ஆஜராக, மல்லையாவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பல்வேறு வங்கிகளில், கடன் வாங்கி மோசடி செய்ததாக வழக்குகள் தொடரப்பட்டதால், விஜய் மல்லையா, ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் லண்டனுக்கு தப்பிச் சென்றான்.
அவனை நாடு கடத்தி ஒப்படைக்கும்படி, பிரிட்டனுக்கு, மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.
இந்நிலையில், மல்லையா மீதான, அன்னிய செலாவணி மோசடி தொடர்பான வழக்கு, டில்லி தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த போது, 'பலமுறை, 'சம்மன்' அனுப்பியும், மல்லையா ஆஜராகவில்லை' என, மத்திய அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 'மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கும் நடவடிக்கைகளை, உடனடியாக துவக்குங்கள்; ஆஜராக, மல்லையாவுக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்படுகிறது. டிச., 18ல், மல்லையா, ஆஜராக வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...