Friday, August 10, 2018

சித்தா, ஆயுர்வேத படிப்பு வரும் 14ல் விண்ணப்பம்

Added : ஆக 10, 2018 05:27

சென்னை:சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, வரும், 14 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, ஆறு அரசு கல்லுாரிகளில், 396 இடங்கள்; 23 சுயநிதி கல்லுாரிகளில், 916 இடங்கள் உள்ளன.இதற்கான விண்ணப்பங்கள், சென்னை, நெல்லை - பாளையங்கோட்டை, மதுரை - திருமங்கலம் மற்றும் நாகர்கோவில் - கோட்டாரில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், வரும், 14 முதல் செப்., 5 வரை வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 5 மாலை 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களை, www.tnhealth.org என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...