Wednesday, December 14, 2016

தானே'வை ஞாபகப்படுத்திய வர்தா!
அதே பாதை, அதே அவதாரம்

சென்னையில், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மரங்களை சாய்த்த, 'வர்தா' புயலின் கோர தாண்டவம், ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய, 'தானே' புயலை ஞாபகப்படுத்தி உள்ளது.

வங்க கடலில் பொங்கி எழுந்த, வர்தா புயல், தமிழகத்தில், வட மாவட்டங்களையும், ஆந்திராவின் தென் மாவட்டங்களையும்

சிதைத்து சென்றது. மழை கொட்டித் தீர்த்தது மட்டுமின்றி, மரங்களை கொத்து கொத்தாக வேரோடு பெயர்த்த வர்தாவின் ஆக்ரோஷம், ஐந்தாண்டுகளுக்கு முன், கடலுாரை புரட்டிப் போட்ட,தானே புயலை ஞாபகப்படுத்தியுள்ளது.

கடலுாரும் சீர்குலைந்தது.

வங்க கடலில், 2011ல், அந்தமானுக்கு மேற்கே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், படிப்படியாக வலுப்பெற்று, டிச., 31ல், கடலுாரில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு, 120 கி.மீ., வேகத்தில்வீசிய காற்றால், 1.5 லட்சம் ஏக்கரில் இருந்த, முந்திரி மற்றும் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன; மொத்த கடலுாரும் சீர்குலைந்தது.அதேபோன்று, தானே உருவான இடத்திற்கு தென் கிழக்கில், வங்க கடலில் உருவான வர்தா

புயல், அதே பாதையில் வந்து, கடலுாருக்கு பதில், சற்று வடக்கே திரும்பி, சென்னையை பதம் பார்த்துள்ளது. கடலுாருக்கு அன்று ஏற்பட்ட பாதிப்பை, சென்னை இன்று உணர்ந்துள்ளது. - நமது நிருபர் -

No comments:

Post a Comment

மறைந்து கொண்டிருக்கும் மூத்த தலைமுறைஒவ்வொருவராக நமக்கு நிரந்தர விடை கொடுத்து ஒரு தலைமுறை மறைந்து கொண்டிருக்கிறது.

மறைந்து கொண்டிருக்கும் மூத்த தலைமுறை ஒவ்வொருவராக நமக்கு நிரந்தர விடை கொடுத்து ஒரு தலைமுறை மறைந்து கொண்டிருக்கிறது. சாப்பிடும் முன் மற்றவர்கள...