Tuesday, June 20, 2017

பூந்தமல்லியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்; பேருந்துகள் நிற்பதை முறைப்படுத்த கோரிக்கை

பதிவு செய்த நாள்
20ஜூன்  2017 00:58

பூந்தமல்லி : பூந்தமல்லியில், நீண்ட நாட்களாக நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, பேருந்துகள் நிற்பதை முறைப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னையின் முக்கிய பகுதியாக, பூந்தமல்லி உள்ளது. அங்கிருந்து, எந்த இடத்திற்கும் செல்ல பேருந்து வசதி உள்ளது. வெளியூர், ஆந்திரா, பெங்களூரு, திருப்பதி, கேரளா உள்ளிட்ட இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், எந்த நேரமும் நெரிசல் இருக்கும்.பேருந்து நிலையத்திற்குள், இரண்டு பகுதிகளாக நிறுத்தங்கள் கட்டப்பட்டுள்ளன. அப்படியிருந்தும், அங்கு நீண்ட நாட்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சாலையோர ஆக்கிரமிப்பு, வரைமுறையின்றி நிறுத்தப்படும் பேருந்துகள், இஷ்டத்திற்கு நிறுத்தி பயணிகளை ஏற்றுவது, பேருந்துகள் திரும்பி செல்ல இடவசதி இல்லாதது, ஆட்டோக்களின் அடாவடி ஆகியவை இதற்கு பிரதான காரணங்களாக உள்ளன.இதனால், 'பீக் ஹவர்' நேரத்தில், பூந்தமல்லி டிரங்க் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், அந்த இடத்தை கடக்க குறைந்தபட்சம், 40 நிமிடம் ஆகிறது. 

விடுமுறை நாட்கள், இரவில் இது அதிகரித்து, பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:வெளியூர் பேருந்துகள், டிரங்க் சாலை வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், இப்பிரச்னை நீடிப்பது வேதனை அளிக்கிறது. பேருந்துகள் வரைமுறையின்றி நிறுத்தப்படுவதும் மற்றொரு காரணம். ஆட்டோக்களின் அடாவடி அதிகரித்துள்ளது.சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஒதுக்கப்பட்ட இடங்களில் பேருந்துகளை முறையாக நிறுத்தினாலே, நெரிசல் குறையும். இதை செய்ய போக்குவரத்து போலீசார் முயற்சி செய்வதே இல்லை. பல ஆண்டுகள் நீடிக்கும் இப்பிரச்னையை தீர்க்க, இனியாவது அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Declare assets online by Oct, TN govt tells staff

Declare assets online by Oct, TN govt tells staff  Julie.Mariappan @timesofindia.com 11.09.2026 Chennai: Tamil Nadu govt has made it mandato...