Tuesday, June 20, 2017

நில பத்திரங்களில் ஆதார் எண் சேர்ப்பா?
பதிவு செய்த நாள்

19ஜூன்2017 23:43

சென்னை: நில பத்திரங்களை, டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பாக, மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கை என, ஒரு ஆவணம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், '1950 முதல் பதிவு செய்யப்பட்ட எந்த ஒரு நில ஆவணத்தையும், நில உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அப்படி இணைக்கப்படாத நில ஆவணங்கள், பினாமி பரிமாற்ற தடுப்பு, திருத்த சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படும்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகமான, பி.ஐ.பி., வெளியிட்ட அறிக்கை:

நில பத்திரங்களை கணினிமயமாக்குதல் மற்றும் அதில் ஆதார் எணணை இணைத்தல் தொடர்பாக, மத்திய அமைச்சரவை செயலகம் பெயரில், வெளியிடப்பட்டதாக கடிதம் ஒன்று, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல். மத்திய அரசு, இதுபோன்ற எந்த கடிதத்தையும் வெளியிடவில்லை.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Declare assets online by Oct, TN govt tells staff

Declare assets online by Oct, TN govt tells staff  Julie.Mariappan @timesofindia.com 11.09.2026 Chennai: Tamil Nadu govt has made it mandato...