Sunday, June 18, 2017

ஜெ. மருத்துவ செலவு ரூ.6 கோடியை அப்போலோவுக்கு செலுத்தியது அதிமுக

ஜெயலலிதா | கோப்புப் படம்.

ஜெயலலிதாவின் மருத்துவச் செலவு ரூ.6 கோடியை அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் அதிமுக வழங்கியது.

முதல்வராக இருந்த ஜெய லலிதா திடீர் உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே 5 முறை யும், எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் 3 முறையும் சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித் தனர். அவர்கள் கொடுத்த ஆலோ சனைகளின்படி அப்போலோ மருத்துவமனை மூத்த டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.

சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்த 2 பெண் பிசியோ தெரபி நிபுணர்கள், ஜெயலலிதா வுக்கு பிசியோதெரபி சிகிச்சை கொடுத்தனர். டிசம்பர் 5-ம் தேதி நள்ளிரவு 11.30 மணி அளவில் ஜெயலலிதா உயிரிழந்தார்.

இதற்கிடையே, ஜெயலலிதா வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக அரசு டாக்டர் பி.பாலாஜி கூறும்போது, “ஜெயலலிதாவுக்கு 75 நாட்கள் மருத்துவமனையில் அளிக்கப் பட்ட சிகிச்சைக்கு ரூ.5 கோடி முதல் ரூ.5.50 கோடி வரை செல வாகியுள்ளது” என தெரிவித்தார். இதையடுத்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு செலுத்துவதா அல்லது கட்சி செலுத்துவதா என்ற பெரும் குழப்பம் நீடித்து வந்தது.

கட்சி சார்பில்..
இந்நிலையில், சில நாட் களுக்கு முன்பு சென்னை ராயப் பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல் வர் கே.பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத் தில், ஜெயலலிதாவின் சிகிச்சைக் கான செலவை கட்சி சார்பில் கொடுப்பது என முடிவு செய்யப் பட்டது. அதன்படி, கட்சியின் சார்பில் ரூ.6 கோடிக்கான காசோலை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டது. அந்த காசோ லையை அப்போலோ மருத்துவ மனை நிர்வாகத்தினரிடம் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் வழங்கினார்.

எம்ஜிஆர் மருத்துவ செலவு
இதுதொடர்பாக அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியதாவது:

‘‘ஜெயலலிதாவுக்கான மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டாம் என நினைத்தோம். அரசுப் பணம் மக்களின் வரிப் பணம். அதனால் ஜெயலலிதாவின் மருத்துவ செலவை கட்சியே செலுத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கட்சியில் இருந்து ரூ.6 கோடிக்கான காசோலை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கரிடம் கொடுக்கப்பட்டது. அவர் மருத்துவமனைக்கு சென்று கொடுத்தார். ஏற்கெனவே எம்ஜிஆரின் மருத்துவ செலவான ரூ.92 லட்சத்தை அரசு செலுத்தியது. பின்னர் அந்த தொகையை அரசுக்கு கட்சி செலுத்திவிட்டது. அண்ணாவின் மருத்துவ செலவையும் கட்சிதான் ஏற்றது’’ என்றார்.

No comments:

Post a Comment

NEET SS 2025 counselling deadlock ends as MCC prepares revised Round 2 schedule after SC verdict

NEET SS 2025 counselling deadlock ends as MCC prepares revised Round 2 schedule after SC verdict  TOI Education | Jul 29, 2026, 10.12 AM IST...