Tuesday, August 15, 2017

சுதந்திர தினத்தை ஒட்டிவடை, பாயாசத்துடன் விருந்து
பதிவு செய்த நாள்15ஆக
2017
00:01

காஞ்சிபுரம்:சுதந்திர தினத்தை ஒட்டி, மாவட்டத்தில் உள்ள முக்கியமான ஆறு கோவில்களில், வடை, பாயாசத்துடன் இன்று மதியம் பொது விருந்து வழங்கப்படுகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆறு கோவில்களில், சுதந்திர தினத்தை ஒட்டி, ஆண்டுதோறும் பொது விருந்து நடைபெறும்.அதன்படி, ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜப்பெருமாள் கோவில், குமரகோட்டம் முருகன் கோவில், செங்கல்பட்டு சக்திவிநாயகர் கோவில், திருப்போரூர் கந்தசாமி கோவில்.இது மட்டுமல்லாமல், கோவூர் பெருமாள் ஆகிய ஆறு கோவில்களில், இன்று மதியம் அப்பளம், வடை, பொரியல், பாயாசம், மோர் ஆகிய உணவுகளுடன், பொது விருந்து நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...