Tuesday, August 15, 2017


சென்னையில் களைகட்டும் சுதந்திர தினம்: ஜொலிக்கும் அரசு கட்டடங்கள்!

சி.மீனாட்சி சுந்தரம் குமரகுருபரன்




71-வது சுதந்திர தினத்தை இன்று இந்தியா கொண்டாடுகிறது. பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே நம் சென்னைக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. இந்தியாவின் டாப் நான்கு நகரங்களில் ஒன்று சென்னை. பிரிட்டிஷ் ஆளுமைக்குள் இருந்த முக்கிய நகரம். மெட்ராஸ் பிரெசிடென்ஸியாக பரந்து விரிந்திருந்ததன் சுருக்கம்தான் இப்போதைய சென்னை.



இங்குள்ள அரசு கட்டடங்களில் ஆங்கிலேய சாயல்களை நன்றாக உணர முடியும். சுதந்திரத்துக்குப் பிறகு அந்த கட்டடங்களில்தான் நாம் ஆட்சி செய்து வருகிறோம். 71-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அக்கட்டடங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் கட்டடங்கள் ஜொலிப்பதை பலரும் வியந்து பார்த்துச் செல்கின்றனர்.






இன்று சுதந்திர தின அணிவகுப்பு நடக்க இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, தேசியக் கொடி ஏற்ற இருக்கிறார். சென்னை கடற்கரையில் நடைபெறும் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் இரவு முழுவதும் நடந்து வருகின்றன. சென்னை ரிப்பன் பில்டிங், தலைமைச் செயலகம், மேலும் பல அரசு கட்டடங்கள், தனியார் நிறுவன கட்டடங்கள் என சென்னையே விழாக்கோலம் பூண்டுள்ளது. கடற்கரை, முக்கிய சந்திப்புகள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் என முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ஒற்றைச் சொல்லில் பண்பின் அடையாளம்!

DINAMANI. 14.03.2026 ஒற்றைச் சொல்லில் பண்பின் அடையாளம்! உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்மையாக உதிக்கும் "நன்றி' என்ற ஒற்றைச் சொல்லே நம...