Wednesday, August 16, 2017

'நர்சிங் ஹோம்'களுக்கு வரித்துறை கிடுக்கிப்பிடி
தமிழகம், புதுச்சேரியில் உள்ள தனியார், 'நர்சிங் ஹோம்'கள், வருமான வரித்துறை, 'கிடுக்கிப்பிடி'யில் சிக்குகின்றன.





நம் நாட்டில், அரசு மருத்துவமனைகள் போது மான அளவுக்கு இல்லாததால், புற்றீசல் போல் தனியார், 'நர்சிங் ஹோம்'களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

சமீபத்தில், லோக்சபாவில் தாக்கல் செய்யப் பட்ட கணக்கு தணிக்கை அறிக்கையில்,'பெரும் பாலான,தனியார்,'நர்சிங் ஹோம்'கள், வருமான வரித்துறையின்கண்காணிப்பிற்கு வரவில்லை'

என, சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. மேலும், 2011 - 2013 வரை, 1,500க்கும் குறைவான, 'நர்சிங் ஹோம்' களே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளன; அதன் எண்ணிக்கையும், வெகுவாக குறைந்து வருவதாக, குறிப்பிடப்பட்டுஉள்ளது.

தற்போது, 'நர்சிங் ஹோம்'களின் ஆண்டு வருவாய், 40 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டிஉள்ளது. அவற்றில், 10 சதவீதத்திற்கு கூட, வருமான வரி கிடைப்பதில்லை.

இதையறிந்த மத்திய அரசு, நேரடி வரிகள் வாரியம் வழியாக, நாடு முழுவதும் உள்ள, வருமான வரித் துறை அலுவலகங்களுக்கு, அது பற்றி தகவல் களை அனுப்பி உள்ளது.இது குறித்து, தமிழக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பெரிய மருத் துவமனைகள், வருமானவரித் துறையினரின் நேரடி பார்வையில் இருந்து தப்ப முடியாது. ஆனால், கண்ணுக்கு தெரியாத இடங்களில் கூட, தனியார், 'நர்சிங் ஹோம்'கள் செயல்படுகின்றன.

இவற்றுக்கு, உள்ளாட்சி அமைப்பு மற்றும் சுகாதாரத் துறையும் அனுமதி அளிக்கின்றன. அத் துறை களிடம், 'நர்சிங் ஹோம்'கள் குறித்த விபரங்கள் உள்ளன. அவற்றில், 10 சதவீதத்திற்கும் குறை வானவை தான், வருமான வரிக் கணக்கு தாக் கல் செய்கின்றன.அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 'நர்சிங் ஹோம்' களின் விபரங்களை சேகரிக்க உள்ளோம். அதன்பின், வரி செலுத்தாதவற்றின் மீது நடவடிக்கை பாயும்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...