துணி பையுடன் வரும் பக்தர்களுக்கு பரிசு!
பதிவு செய்த நாள்
10நவ2017
01:16
வேலுார்: தி.மலை தீபத்திருவிழாவுக்கு வரும் பக்தர்கள், சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வகையில் துணிப்பை, சணல் பை எடுத்து வந்தால், அவர்களுக்கு அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.
திருவண்ணாமலையில், டிச., 2ல் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவுக்கு வரும் பக்தர்கள், பூஜை பொருட்கள் மற்றும் திண்பண்டங்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கிரிவலப்பாதை மற்றும் பிற இடங்களில் குப்பையாக வீசப்படுகிறது.
திருவண்ணாமலையில், டிச., 2ல் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவுக்கு வரும் பக்தர்கள், பூஜை பொருட்கள் மற்றும் திண்பண்டங்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கிரிவலப்பாதை மற்றும் பிற இடங்களில் குப்பையாக வீசப்படுகிறது.
திட்டம்:
இதனால், பல இடங்கள் குப்பையாக காட்சியளிப்பதுடன், சுற்றுச் சூழல் மாசுபடவும் காரணமாக உள்ளது.இதற்கு மாற்றாக துணிப்பை, சணல் பை மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த பிற பைகளை பயன்படுத்த வலியுறுத்தி, தி.மலை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து தங்கம், வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தி.மலையில் மூன்று இடங்களில் அமைக்கப்படும், சிறப்பு பிளாஸ்டிக் தவிர்ப்பு மையங்களில், பக்தர்கள் தாங்கள் எடுத்து வரும் துணிப்பை, சணல் பைகளை காண்பித்து, அதில் அழியாத மையால், 1 என குறியிட்ட பின், வரிசை எண்ணுடன் கூடிய சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மணி நேரத்துக்கும், கணினி குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலி தேர்வு செய்யப்பட்டு, 10 கிராம் வெள்ளி நாணயம் பரிசு வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு, எட்டு மணி நேரத்துக்கும் ஒரு சிறப்பு அதிர்ஷ்டசாலி தேர்வு செய்யப்பட்டு, இரண்டு கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கப்படும்.
அறிவிப்பு:
தேர்வு செய்யப்பட்ட வரிசை எண், அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் காவல் துறை ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படும். தி.மலை பஸ் நிலையத்திலுள்ள நகராட்சி பொது சுகாதார பிரிவு அலுவலகத்தில், அதிர்ஷ்ட சீட்டை ஒப்படைத்து பரிசு பெற்றுக்கொள்ளலாம்.டிச., 2ம் தேதி காலை, 6:00 மணி முதல், 3ம் தேதி காலை 6:00 மணி வரை, தொடர்ச்சியாக, 24 மணி நேரமும் அதிர்ஷ்ட சீட்டுகள் வழங்கப்படும். தலா, 10 கிராம் எடை உள்ள, 24 வெள்ளி நாணயங்கள், தலா 2 கிராம் எடை உள்ள, மூன்று தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்படும்.
பக்தர்கள், சுற்றுச் சூழலுக்கு உகந்த துணிப்பை, சணல் பையுடன் வந்து, பரிசு திட்டத்தில் பங்
கேற்பதோடு, தி.மலையின் சுற்றுச்சூழலை தொடர்ந்து பாதுகாக்க முழுமையான ஆதரவு தருமாறும், மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துஉள்ளது.
No comments:
Post a Comment